மும்பை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: மூதாட்டி பலி – பலர் காயம்..!!
Read Time:1 Minute, 5 Second
மும்பை புறநகர் பகுதியான தானேவுக்கு உட்பட்ட ஆதார்வாடி பகுதியில் உள்ள ஒரு மாடிவீட்டில் இன்று காலை சுமார் 8 மணியளவில் சமையலுக்கான கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த அதிர்ச்சியில் அந்த வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்து தரைமட்டம் ஆனது.
அந்த வீட்டில் வசித்துவந்த மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்களும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்புப் படையினர் ஒரு மூதாட்டியை பிணமாகவும், ஆறு குழந்தைகள், நான்கு பெண்கள் மற்றும் இரு ஆண்களை காயங்களுடனும் மீட்டனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Average Rating