குடும்ப தலைவர் இறந்த சோகம்: ரெயில் முன் பாய்ந்து மனைவி, மகன், மகள்கள் தற்கொலை…!!

Read Time:2 Minute, 5 Second

201607301123370203_Four-of-family-commits-suicide-after-death-of-head_SECVPFதெலுங்கானா மாநிலத்தில் குடும்ப தலைவர் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் அவரது மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் ரெயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், வாராங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்தியநாராயணா(51). அம்மாநில அரசின் வேளாண்மைத்துறையில் செயல் இயக்குனராக பணியாற்றிவந்த இவர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை ஐதராபாத் நோக்கி காரில் சென்றபோது திடீரென மரணம் அடைந்தார்.

இந்த மரண செய்தியை ஏற்படுத்திய சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாத அவரது மனைவி மீரா(51), மகள்கள் சுவாதி(33), நீலிமா(28) மற்றும் மகன் சிவராம கிருஷ்ணன் ஆகியோர் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அன்குஷாபூர் பகுதியில் இன்று அதிகாலை ரெயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதுதொடர்பான தகவல் அறிந்ததும் நான்கு பிரேதங்களையும் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ரெயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுக்கோட்டை அருகே தந்தையை கொன்ற மகன்…!!
Next post நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களா? உங்கள் நுரையீரலின் நிலையைப் பாருங்கள்! வீடியோ..!!