மகளை நீராடுமாறு கூறி காணொளி பதிவு செய்த நபரை கையும் களவுமாக பிடித்த தாய்..!!
யுவதியொருவர் நீராடும் போது அதனை கெமராவில் காணொளியாக பதிவு செய்த நபரொருவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு காணொளி பதிவு செய்தவர் 15 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது.தனது மகள் நீராடும் போது காணொளி பதிவு செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மகளை நீராட கூறிவிட்டு அவரின் தாய் கவனித்து கொண்டிருந்துள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து இனந்தெரியாத நபரொருவர், நீர் குழாயின் ஊடாக ஏறி குளியலறை ஜன்னலின் வழியாக காணொளியை பதிவு செய்த போது குறித்த யுவதியின் தாயிடம் அந்த நபர் கையும் களவுமாக சிக்கி கொண்டுள்ளார்.
பின்னர் சந்தேக நபர், நீர்கொழும்பு காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபரின் உளவியல் அறிக்கையை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு;நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம், காவற்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
Average Rating