முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில்…!!

Read Time:2 Minute, 11 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)திருகோணமலை – கந்தமலாவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

கோமரங்கடவெல பிரதேசத்திலிருந்து கன்தமலாவ பகுதிக்கு ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, காட்டு யானையைக் கண்டு சாரதி வண்டியை வேகமாக செலுத்தியுள்ளார்.

இதன் காரணமாக வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியுள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் அதே இடத்தைச்சேர்ந்த சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றும் எம்.மதுசங்க (38 வயது) -மனைவியான ஏ.நிலூகா தமயந்தி (36 வயது) மற்றும் மகனான எம்.மதுவன்த (06வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சென்று கொண்டிருந்த வேளை காட்டுயானையை கண்டு வேகமாக முச்சக்கர வண்டியை செலுத்திய போது வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகியதால் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரணத்திலும் பிரியாத தோழிகள் – தீ முட்டி தற்கொலை…!!
Next post பச்சிளம் குழந்தையை கடந்த முயன்ற பெண்: காப்பாற்றிய 9 வயது சிறுவன்…!!