இரண்டு சிறுவர்களை துஸ்பிரயோகப்படுத்தி வந்த இளைஞர் கைது…!!
இரண்டு சிறுவர்களை ஒரு மாதமாக தொடர்ச்சியாக துஸ்பிரயோகப்படுத்தி வந்த 28 வயது இளைஞர் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 மற்றும் 9 வயதான இருவரே இவ்வாறு குறித்த இளைஞரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளதாகவும், சிறுவர்கள் இருவரும் சகோதரர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விடுதி ஒன்றில் பணியாற்றி வரும் குறித்த இளைஞர் குத்துச்சண்டை போட்டியை பார்ப்பதற்காக குறித்த சிறுவர்களை தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு ஆபாச படங்களை காண்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்திலேயே சிறுவர்கள் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர்களின் தாய் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
தாயின் முறைபாட்டிற்கு அமைய சந்தேகநபரை கைதுசெய்துள்ள பொலிஸார் இன்று இவரை மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating