தேனியில் வி‌ஷம் குடித்து சூப்பிரண்டு அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் போலீஸ்..!!

Read Time:2 Minute, 2 Second

201608021456292443_woman-police-suicide-attempt-in-theni_SECVPFதேனி மாவட்டம் பெரிய குளம் தென்கரை காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருபவர் ஜெயந்தி (வயது 27). இவரது கணவர் மோகன். மதுரை மின் வாரியத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். ஜெயந்தி தேனி காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

நேற்று ஜெயந்தி மனக்கவலையுடன் காணப்பட்டார். மாலையில் பணி முடிந்ததும் வீடு திரும்பிய அவர் வழியில் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்தார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சென்ற அவர் வளாகத்தில் மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் எதற்காக வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு சிறுவர்களை துஸ்பிரயோகப்படுத்தி வந்த இளைஞர் கைது…!!
Next post ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் குடிக்க சென்ற இரு சிறுவர்கள் கால்வாயில் மூழ்கி பலி..!!