ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் குடிக்க சென்ற இரு சிறுவர்கள் கால்வாயில் மூழ்கி பலி..!!
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள மோகன்கார் பகுதியில் இரு சிறுவர்கள் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் பிணங்களை வாய்க்காலில் இருந்து வெளியே எடுத்தனர்.
நேற்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பும்போது தண்ணீர் குடிப்பதற்காக கால்வாயில் இறங்கிய ரசித் கான்(12) மற்றும் இர்பான் கான்(8) தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கும் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating