குழந்தையை தொலைத்த தாய் – கண்டுபிடித்துக் கொடுத்த பொலிஸார்..!!
கடந்த மாதம் 8ஆம் திகதி தனது 10 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளதாக குறித்த குழந்தையின் தாய் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை நேற்று சிலாபம் பிரதேசத்தில் கைக்குழந்தை ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும், காணாமல் போன குழந்தை குறித்த குழந்தையாக இருக்கலாம் எனவும் கோட்டை பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சிலாபம் மற்றும் கோட்டை பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஒருமாத காலமாகியும் தனது குழந்தையைக் காணாமல் குறித்த தாய் மிகவும் மனவேதனையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையை மீட்ட பொலிஸார்!
காணாமல் போயுள்ள குழந்தை நேற்று கோட்டை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதான கிருலப்பனையைச் சேர்ந்த நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை தற்போது தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating