மலசலகூட குழியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு…!!
திருகோணமலை மரத்தடி சந்தியில் உள்ள வளவொன்றுக்குள் இருந்து நேற்றிரவு ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 54, எம்.எம் துப்பாக்கி ரவைகள் 02 என்பன மீட்கப்பட்டதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மலசலகூடம் கட்டுவதற்காக வேண்டி அவ்வீட்டு உரிமையாளர் குழி தோண்டிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கி ரவைகள் இருப்பதை கண்டுள்ளார்.
இதுதொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating