தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த கொடூரம்: பொதுமக்கள் சாலை மறியல்..!!

Read Time:2 Minute, 28 Second

201608061847180904_Five-year-old-girl-torture-in-Hapur-villagers-block-NH24-in_SECVPFஉத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், டெல்லி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது கேரா கிராமம். இங்கு வசிக்கும் ஒரு குடும்பத்தினர், தங்கள் ஐந்து வயது சிறுமியுடன் நேற்று இரவு வீட்டுக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த சிறுமியை கடத்திச் சென்று கற்பழித்துள்ளனர்.

விடியற்காலை சுமார் 4 மணிக்கு பெற்றோர் எழுந்து பார்க்கும்போது சிறுமியை காணவில்லை. உடனே தேட ஆரம்பித்தனர். அப்போது, காலையில் சிறுமி வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் சாலையோரம் நடைமேடையில் இருந்தாள். பதறியடித்துக்கொண்டு அங்கு சென்று சிறுமியை மீட்டு அருகிலுள்ள மீரட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவளை பரிசோதித்து, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர்.

இதனையறிந்த கிராம மக்கள் மிகவும் கோபம் அடைந்தனர். இதனால் கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று உறுதி அளித்த பின்னரே மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

உத்தரபிரதேசத்தில் ஒரு தாயும், மகளும் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு ஒரு வாரம் ஆவதற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பகலில் குட்டித் தூக்கம் கட்டாயம் போடணுமாம்… காரணம் என்னனு தெரியுமா?
Next post உத்தரகாண்டில் நிலச்சரிவு: ஒருவர் பலி -சர்தாம் யாத்திரை தொடர்ந்து பாதிப்பு…!!