யாழ் இளைஞர்களின் வியத்தகு சாகசங்கள்! அதிரடி காட்டிய நிமிடங்கள்…!!

Read Time:12 Minute, 1 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)பார்ப்போரை வியக்க வைக்கும் வகையிலும், திகிலையும் ஏற்படுத்தும் விதமாக யாழ்ப்பாண இளைஞர்கள் இன்றைய தினம் சாகச நிகழ்வுகளை நடத்திகாட்டியுள்ளனர்.

தேசியக் கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இளைஞர் பாராளுமன்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் விசேட ஆற்றலுள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி இன்று காலை 08.30 மணி முதல் மாலை வரை யாழ்ப்பாணத்திலுள்ள திருமறைக் கலாமன்ற கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது யாழ். மாவட்ட இளைஞர்கள் பலர் மேடையில் அரங்கேற்றிய திறமைகள் வியக்க வைக்கும் சாகசங்களாக அமைந்திருந்தன.

இந்தப் போட்டிக்கு யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 110 இளைஞர் யுவதிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், இன்றைய தினம் முதற்கட்டமாக 54 இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியின் நடுவர்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் சி. எஸ். யமுனானந்தா, ஓய்வு நிலை அதிபர் செ. சேதுராஜா, யாழ்.கல்வி வலய ஓய்வு நிலை ஆசிரியர் திருமதி- ப. செல்வேந்திரகுமார், சட்டத்தரணி காயத்திரி குமாரவேல், ஆசிரியர் ச. அகிலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ். மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முதலாவது தடவையாக ஏற்பாடு செய்து நடாத்தும் இந்த விசேட ஆற்றலுள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி யாழ்ப்பாணத்து இளைஞர்களின் கலைத்துவ திறமைகளைத் தமக்கே உரிய பாணியில் வெளிப்படுத்துவதற்கு அமைத்துக் கொடுத்துள்ள சிறந்ததொரு களமென்றே கூறலாம்.

13 வயதிற்கும் 29 வயதுக்கும் உட்பட்ட வயதினர்களின் திறமைகள் இனங்காணப்பட்டு அவர்களிடம் ஒழிந்துள்ள விசேட ஆற்றல்களை வெளிக் கொண்டு வருவதற்கான இந்தப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துப் போட்டியாளர்களும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகத் திறந்து விடப்பட்டிருந்த மாபெரும் மேடையைத் தவறாதும், சரிவரவும் பயன்படுத்த வேண்டுமென்பதில் குறியாகவிருந்தனர் என்பதை காண முடிந்துள்ளது.

இதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்திய தனித்துவத் திறமைகளே தக்க ஆதாரம்.

இந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்த சுன்னாகம் கந்தரோடை மக்கள் முன்னேற்றக் கழக இளைஞர் கழகத்தின் தலைவரான செல்வராசா விஜிதரன் 300 கிலோ ஐஸ் கட்டியைத் தன்னுடைய வயிற்றில் வைத்து வேறொரு இளைஞர் சுத்தியலால் அதனை ஓங்கி உடைக்க, எந்த விதப் பாதிப்புமின்றி எழுந்து வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து தனது கையால் பல கிலோ எடையுள்ள ஐஸ் கட்டியை உடைத்ததுடன், அவரது முதுகிலும் பல கிலோ எடையுள்ள ஐஸ்கட்டி சக இளைஞர்களால் வைக்கப்பட்டு உடைக்கப்படுகிறது.

இதன் உச்சக்கட்டமாகச் சுமார் ஐந்து கிலோ எடையுள்ள ஐஸ்கட்டியை அவரே தனது தலைமீது வைத்திருக்க வேறொருவரால் ஓங்கி உடைக்கப்படுகிறது.

இந்தக் காட்சியை வைத்த கண் வாங்காமற் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு குறித்த இளைஞனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ? என்ற எண்ணத்துடன் அந்த இளைஞனை நோக்குகிறார்கள். ஆனால், அவன் சர்வ சாதாரணமாகச் சிரித்துக் கொண்டு வருகிறான்.

குறித்த இளைஞனிடம் இதற்கான முன்னாயத்தப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்களா? என வினவிய போது நான் 50 கிலோ ஐஸ் கட்டியை வைத்துத் தான் பயிற்சி மேற்கொண்டிருக்கிறேன்.

ஆனால், இன்றைய இந்த நிகழ்வு மேடையில் நான் 300 கிலோ ஐஸ் கட்டியை எனது வயிற்றில் வைத்து எப்படியாவது உடைக்க வேண்டுமென எண்ணியிருந்தேன் அதனை நிறைவேற்றியும் விட்டேன் என்றார்.

மேலும், மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவாகும் நிலை உருவானால் 700 கிலோ ஐஸ் கட்டியை என் வயிற்றில் வைத்து உடைக்க வேண்டும் என்பதே என் இலக்கு என்று குறிப்பிட்ட அவரிடம், உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதா எனக் கேட்ட போது, என்னிடம் இந்தத் திறமை மாத்திரமன்றி வேறு பல திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான ஆற்றல்கள் காணப்படுகின்றன.

சிறிய வயதிலேயே என் திறமைகளை வித்தியாசமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் எனக்கிருந்தது.

ஆனால், கடந்த கால போர்க் காலச் சூழல் காரணமாகவும், குடும்பப் பொருளாதாரம் போதாமை காரணமாகவும் எமது திறமைக்கு உரிய அங்கீகாரத்தை இதுவரை காலமும் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றார்.

இதேவேளை இவ்வாறான அசாத்தியமான திறமைகளை வெளிக் கொண்டு வருவதால் ஆபத்துக்கள் ஏதாவது உடலுக்கு ஏற்பட்டு விடும் என அவர்கள் எண்ணிக் கொள்வதால் பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு மன நிலையே உள்ளது. ஆனால், சக நண்பர்கள் என் திறமைக்கு என்றென்றும் ஊக்குவிப்பாகவும், உறுதுணையாகவுமிருந்து வருகிறார்கள் என்றார்.

எம்மில் பலருக்கும் ஒரு தேங்காயைக் கையால் தேங்காய் உரிப்பதே இயலாத காரியம். ஆனால், 13 நிமிடத்தில் 16 பச்சைத் தேங்காய்களை வேக வேகமாக உரித்துப் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் இளவாலையைச் சேர்ந்த 21 வயதான இராசரத்தினம் பிரசாந்தன்.

நான் வித்தியாசமான திறமைகளை வெளிப்படுத்தி அனைவரையும் கவர வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தேன். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனது எண்ணத்தில் உதித்ததே குறைந்த நேரத்தில் அதிக தேங்காய்களை உரிக்க வேண்டும் என்ற எண்ணமாகும்.

எமது கிராமத்தில் பல்வேறு சமூக ரீதியான செயற்பாடுகளை முன்னின்று செயற்படுத்தி வரும் இளைஞர் அமைப்பான இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரின் ஊக்குவிப்பே என்னை இவ்வாறான திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்துவதற்குத் தூண்டியது என்றார்.

பிறப்பிலேயே இரு கால்களும் குறை விருத்தியுடன் காணப்படுகின்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 23 வயதான இருதயநாதன் பிரசன்னா மாற்று வலுவுள்ளவராகவிருந்த போதும் அவர் மேடையில் நடனம் ஆடிக் காட்டிய விதம் மக்கள் மனங்களை வெகுவாகக் கட்டிப் போட்டது.

நடனத்தின் இடையிடையே குத்துக் கரணமும் போட்டு அனைவரையும் வியக்க வைத்தார். பருத்தித்துறையில் சைக்கிள் கடையொன்றின் உரிமையாளராகவுள்ள குறித்த இளைஞன் தனது நாளாந்தக் கடமைகளை எவருடைய உதவியுமின்றி தானே நிறைவேற்றுவதாகத் தெரிவிக்கிறார்.

நான் கடந்த-2014 ஆம் ஆண்டு க. பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள குழந்தையொன்றின் முதலாவது பிறந்த நாளில் எனது நடனத் திறமையை முதன் முதலில் வெளிப்படுத்தினேன். அதன் பின்னர் நான் பல நிகழ்வுகளிலும் பங்குபற்றி என்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறேன்.

என் அண்ணா என்னுடைய திறமையை ஊக்குவிப்பதில் மிகுந்த கரிசனையுடன் செயற்படுகிறார். என் திறமையை வெளிப்படுத்துவதற்கான பயிற்சிகளை நானே மேற்கொள்கிறேன் என்றார்.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாக மிளிர்வதற்கு அவர்களுக்குப் பொருத்தமான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பது எமது சமூதாயத்தின் கடமை.

இன்றைய இளைஞர்கள் திசை மாறிப் போகிறார்கள் எனக் குற்றச்சாட்டுபவர்கள் அவர்கள் திசை மாறிப் போகாமல் தடுப்பதற்குப் பின்னிற்பது ஏன்? தென்னிந்தியச் சினிமா மாயைக்குள் சிக்குண்டு எம்மை நாமே தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இதனால், எம் மண்ணின் கலைகள், கலைஞர்களின் திறமைகளுக்கு நாம் முக்கியதத்துவம் வழங்குவதில்லை. எங்களுக்குத் இளைஞர்கள் அனைவரிடத்திலும் பல விதமான ஆக்க பூர்வமான சிந்தனைகள் உள்ளன.

அந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளை வழிப்படுத்தி அவர்களின் திறமைகளுக்கு உரிய களத்தை அமைத்துக் கொடுக்க சமூகப் பொறுப்புணர்வு உணர்ந்து செயற்படுவோமாக என இங்கு கலந்து கொண்டிருந்த மக்களில் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லக்‌ஷபான தோட்டக் குடியிருப்பில் தீ விபத்து..!!
Next post யாழ் இளவாலை வடலியடைப்பு பகுதியில் உயிருடன் சிசு மீட்பு..!!