யாழ் இளவாலை வடலியடைப்பு பகுதியில் உயிருடன் சிசு மீட்பு..!!
யாழ்ப்பாணம் இளவாளை வடலியடப்பு பகுதியில் பிறந்து 10 நாட்களேயான குழந்தை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (8) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை பெட்டி ஒன்றில் இடப்பட்டு வடலியடப்பு பகுதி கோயிலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பொது மக்கள் மீட்டு இளவாளை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தெல்லிப்பளை மருத்துவமனைக்குச் கொண்டுச் செல்லப்பட்ட குறித்த குழந்தை தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இளவாளை பொலிசார் விசரைகளை முன்னெடுத்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating