மராட்டியம்: 16 வயது சிறுமியை கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் கைது..!!
மராட்டிய மாநிலம் சாங்லி மாவட்டம் விஷ்ரம்பாக் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர் பிரேம் சுக்தேவ் பான்சோடே (வயது26). இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.
அந்தப் பெண் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் சுக்தேவ் அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தார். துப்பாக்கி முனையில் பெற்றோரை மிரட்டினார்.
பின்னர் இளம்பெண்ணையும் மிரட்டி கற்பழித்தார். நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் குடும்பத்தையே ஒழித்து கட்டுவேன் என்று கூறிச் சென்றார்.
ஆனால் பாதிக்கப்பட்ட தனக்கு ஏற்பட்ட கொடுமையை உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு புகார் மனு கொடுத்தார். அதன் பேரில் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு தீபாலி காக்டே விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் சுக்தேவ் கைது செய்யப்பட்டார். அவர் மீது கற்பழிப்பு, மிரட்டல் உள்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating