மாயமான விமானத்தின் பாகங்களா? மர்ம பொருள் கண்டுபிடிப்பு…!!
ராணுவ விமானம் மாயமான, வங்க கடலில் 3½ கிலோ மீட்டர் ஆழத்தில் சந்தேகப்படும் மர்ம பொருள் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அதை ‘ரிமோட் ஆபரேட்டிங் வெகிகிள்’ என்ற நவீன கருவி மூலம் வெளியே எடுத்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
ராணுவ விமானம் மாயமான, வங்க கடலில் 3½ கிலோ மீட்டர் ஆழத்தில் சந்தேகப்படும் மர்ம பொருள் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அதை ‘ரிமோட் ஆபரேட்டிங் வெகிகிள்’ என்ற நவீன கருவி மூலம் வெளியே எடுத்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கடந்த மாதம் 22-ந்தேதி புறப்பட்ட ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் மாயமானது.
ஆனால் அன்று காலை 9.12 மணிக்கு, விமானம் மாயமானதாக ரேடார் கருவியில் தகவல் பதிவானது. இதுகுறித்து விமானப்படை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், கடந்த ஒரு மாதமாக ஆராய்ச்சிக்கப்பல்கள், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் விமானம் மாயமான இடத்தில் கடலுக்கு அடியில் சந்தேகப்படும் படியான மர்ம பொருள் ஒன்று கிடப்பது தெரிய வந்துள்ளது. நவீன கருவி உதவியுடன் அந்த பொருளை எடுத்து ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating