மாணவர்களுக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் மீட்பு..!!
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்ய வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும், மாத்திரைகள் மற்றும் கஞ்சா சுருட்டு ஒரு தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது கல்பிட்டி நகரைச் சேர்ந்த 50 வயதான ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை ஒரு வில்லை சந்தேகநபரால் 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேகநபர் வசமிருந்து போதைப் பொருள் விற்று பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும், 1,39,500 ரூபா நிதியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுஇவ்வாறு இருக்க, குறித்த மாத்திரைகளை விற்பனை செய்ய சந்தேகநபர் அனுமதி பெற்றிருக்கவில்லை எனவும், ஒரு காலத்தில் அவர் மருந்து விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவரை கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating