வீதியில் கஞ்சாவுடன் நடமாடிய மூவர் கைது…!!
விற்பனைக்காக கஞ்சாவை தம்வசம் வைத்துக் கொண்டு வீதியில் நடமாடிய மூவரை நேற்று கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்களில் இருவரிடமிருந்தும் மொத்தம் 11,490 மில்லிகிராம் கஞ்சாவும், மற்றைய நபரிடமிருந்து கஞ்சா சுருட்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கஞ்சாவை வைத்திருந்த இருவரும் வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த 56, மற்றும் 59 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், 32 வயதான மூன்றாவது நபர் ஏறாவூர் ஆலையடி வீதியில் கஞ்சா சுருட்டொன்றை விற்பனைக்காக வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating