காதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த உதவி பேராசிரியர் கைது…!!

Read Time:3 Minute, 44 Second

201608290814371105_assistant-professor-arrested-for-2nd-marriage_SECVPFதர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நெற்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 31). எம்.எஸ்.சி., எம்.பில். படித்துள்ள இவர் 2013-ம் ஆண்டு தர்மபுரியில் ஒரு தனியார் கல்லூரியில் வேலை செய்துவந்தார். அப்போது அதே கல்லூரியில் வேலை செய்த அனு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் பாலச்சந்திரனுக்கும், தர்மபுரியில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் வேலை செய்துவந்த சுபாஷினி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அடிக்கடி பாலச்சந்திரன் வீட்டுக்கு சென்றுவந்தார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் தனித்தனியாக வசித்துவந்தனர். இதுகுறித்து அனு பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

பின்னர் பாலச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அனு மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவருடைய செல்போனையும் தொடர்புகொள்ள முடியவில்லை. பேஸ்புக்கில் தனது கணவரை அனு தேடினார். அப்போது அதில் பாலச்சந்திரன், சுபாஷினி ஆகிய 2 பேரும் ஒரு வயது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அனு, இதுகுறித்து பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலச்சந்திரன் அரியலூரில் ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பாலச்சந்திரனை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சுபாஷினியை காதலித்து தனது மனைவிக்கு தெரியாமல் 2-ம் திருமணம் செய்ததும், தற்போது இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மனைவிக்கு தெரியாமல் 2-ம் திருமணம் செய்த உதவி பேராசிரியர் பாலச்சந்திரனை கைது செய்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாட்டவர்கள் நாட்டில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு தடை…!!
Next post காதலனுக்காக காதலி இவ்வாறு தான் இருக்க வேண்டுமாம்…!!