மர்மமான முறையில் உயிரிழந்த நபர் : விசாரணைகள் தீவிரம்…!!
பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தெரேசியா தோட்ட கொல்கமுவ ஒயா ஆற்றுப் பகுதியில் ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மாணிக்ககல் அகழ்வில் தொழிலை மேற்கொள்ளும் தெரேசியா தோட்டத்தை சேர்ந்த எம்.தெய்வேந்திரன் வயது 43 என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கீரை பிடுங்க சென்ற இவர் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. ஆனால்வீட்டில் உள்ளவர்கள் இவர் மாணிக்ககல் அகழ்வு தொழிலுக்கு சென்றிருக்கலாம் என
நினைத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து சென்றவர் திரும்பிவராத நிலையில் அப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று (29) காலை கொசல்கமுவ ஒயா ஆற்றுப்பகுதியில் சடலமாக கிடப்பதை கண்ட பொதுமக்கள் பொகவந்தலா பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating