வெளிநாட்டவருக்கு கஞ்சா விற்பனை! பொலிஸார் சுற்றிவளைப்பு…!!
மட்டக்களப்பு – நாவலடிசந்தி பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் நாவலடிச்சந்திப் பிரதேசத்தில் வாகனங்களுக்கு டயர் திருத்தும் கடை வைத்துள்ள ஒருவர் வெளியூர்களைச் சேர்ந்த நபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து, குறித்த நபரின் வர்த்தக நிலையம் சேதனையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரிடம் இருந்து 5000Mg அளவு கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating