விசேட யோசனைத் திட்டமொன்றை முன்வைக்க தயாராகும் பிரதமர் ரணில்…!!
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட யோசனைத் திட்டமொன்றை முன்வைக்க உள்ளார்.
எதிர்வரும் 10ம் திகதி பொரளை கம்பல் மைதானத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வின் போது நாட்டின் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து விசேட யோசனைத் திட்டமொன்றை பிரதமர் சமர்ப்பிக்க உள்ளார்.
இந்த யோசனைத் திட்டத்திற்கு கட்சியின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் 6ம் திகதி விசேட செயற்குழுக் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.
கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்க உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating