மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயம்…!!
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை வேளையில் நடந்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவரும் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதனால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating