கணவன் பட்ட கடன் தொல்லை தாங்காமல் மனைவி தற்கொலை..!!

Read Time:1 Minute, 50 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)தன் கணவன் பட்ட கடனை வசூலிக்க வரும் நபர்களின் தொல்லை தாங்காமல் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கம்பஹா மாவட்டம், வேயாங்கொடை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது.

கணவன் பெற்ற கடனை வசூலிக்க வரும் நபர்கள் அடாவடியாக நடந்து கொள்வதாகவும், தனது கணவனுக்கு இந்தளவு கடன் இருக்கும் என்று தான் நினைத்திருக்கவில்லை என்றும் குறித்த பெண் தற்கொலைக்கான கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடன் தொல்லை தாங்காமலேயே தான் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்து விட்டு வீட்டின் கூரையில் தூக்குப் போட்டு குறித்த பெண் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பான மரண விசாரணைகள் நேற்று அத்தனகல்ல மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடைபெற்றது.

சம்பவம் தொடர்பில் வேயாங்கொடை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு…!!
Next post பணம் கொடுக்க மறுத்த பெண்ணை கொடூரமாக கற்பழித்த பிச்சைக்காரன்…!!