பணம் கொடுக்க மறுத்த பெண்ணை கொடூரமாக கற்பழித்த பிச்சைக்காரன்…!!

Read Time:3 Minute, 6 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)பிரித்தானியா நாட்டில் பணம் கொடுக்க மறுத்த பெண் ஒருவரை கொடூரமாக கற்பழித்துவிட்டு தப்பிய பிச்சைக்காரனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேற்கு லண்டனில் உள்ள Islington என்ற பகுதியில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரண்டு தினங்களுக்கும் முன்னர் Essex சாலையில் சுமார் 50 வயதான பெண் ஒருவர் சாலையில் நடந்துச் சென்றுள்ளார்.

அப்போது, அடையாளம் தெரியாத பிச்சைக்காரன் அந்த பெண்ணிடம் கை நீட்டி பிச்சை கேட்டுள்ளார்.

பரிதாபம் அடைந்த பெண் அவருக்கு ஒரு நாணயத்தை போட்டுவிட்டு அங்கிருந்து விலக முயன்றுள்ளார்.

ஆனால், பெண்ணை தடுத்தி நிறுத்திய அந்த பிச்சைக்காரன் மீண்டும் பணம் கேட்டு கையை நீட்டியுள்ளார்.

இதனால் எரிச்சல் அடைந்த அந்த பெண் அங்கிருந்து வேகமாக நடக்க முயன்றுள்ளார். ஆனால், அப்பெண்ணை பின் தொடர்ந்த அந்த பிச்சைக்காரன் ஆட்கள் இல்லாத தனிமையான இடம் பார்த்து அப்பெண் மீது பாய்ந்துள்ளான்.

பிச்சைக்காரனின் செய்கையால் அதிர்ச்சி அடைந்த பெண் கடுமையாக போராடியுள்ளார். ஆனால், முரட்டுத்தனமாக செயல்பட்ட பிச்சைக்காரன் கத்தியை காட்டி மிரட்டி அப்பெண்ணை கொடூரமாக கற்பழித்துள்ளான்.

பின்னர், பெண்ணின் பையில் இருந்த பணம் மற்றும் சில பொருட்களை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.

இச்சம்பத்திற்கு பிறகு பெண் பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் பொலிசார் விசாரணை செய்தபோது கற்பழித்த பிச்சைக்காரனுக்கு 35 வயது இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.

பொது இடத்தில் பணம் கொடுக்காத பெண்ணை கொடூரமாக கற்பழித்த பிச்சைக்காரனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவன் பட்ட கடன் தொல்லை தாங்காமல் மனைவி தற்கொலை..!!
Next post பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி?