லொறியுடன் மோதிய இரு முச்சக்கரவண்டிகள் – இருவர் பலி…!!
குருவிட்ட – மில்லவிடிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறி ஒன்றுடன் இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதுண்டதினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பலியானவர்கள் குருவிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் 46 மற்றும் 55 வயதினையுடையவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
குறித்த லொறியின் சாரதியை குருவிட்ட பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating