ஆபாச சிடியில் சிக்கிய டெல்லி முன்னாள் மந்திரிக்கு 3 நாள் போலீஸ் காவல்..!!
டெல்லியில் அமைச்சராக இருந்த சந்தீப் குமார் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச சிடி வெளியானது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் கட்சியில் இருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சந்தீப் குமார் தொடர்பான ஆபாச வீடியோவில் அவருடன் நெருக்கமாக இருக்கும் பெண் டெல்லி சுல்தான்புரி போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த ஆண்டு ரேசன் கார்டு தொடர்பாக அமைச்சர் சந்தீப் குமாரை அணுகியபோது அவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக குற்றம் சாட்டினார்.
அதன் அடிப்படையில் சந்தீப் குமார் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுபற்றி அறிந்த சந்தீப் குமார் டெல்லி புறநகர் துணை கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று சரண் அடைந்தார். விசாரணைக்கு பின்னர் சந்தீப் குமாரை கைது செய்த போலீசார் அவரை டெல்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
சந்தீப் குமாரை மூன்று நாள் போலீஸ் காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரித்து வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating