உ.பி.யில் கொடூரம்: கணவன் கண்ணெதிரே புதுமணப் பெண் கற்பழித்து, படுகொலை…!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கங்கை ஆற்றில் குள்ளித்துவிட்டு கணவருடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்த புதுமணப் பெண்ணை வழிமறித்து, கணவர் கண்ணெதிரே கற்பழிப்பழித்துக் கொன்றுவிட்டு, தலைமறைவான கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், காஸ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் திலிப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இவர், நேற்றுமாலை கச்லகாட் பகுதியில் ஓடும் கங்கை ஆற்றில் குளிப்பதற்காக தனது புதுமனைவியை சைக்கிளில் அழைத்து சென்றார்.
கங்கையில் நீராடிவிட்டு இந்த தம்பதியர் நேற்றிரவு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். சோரோ என்ற இடத்தின் அருகே அவர்களை ஒரு கும்பல் வழிமறித்தது. கத்தி முனையில் திலிப்பை சிறைபிடித்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரது இளம்மனைவியை மாறி,மாறி கற்பழித்ததுடன் அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்றனர்.
பின்னர், திலிப்பையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்திய அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த சுன்காரி பகுதி போலீசார், அந்த இளம்பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating