நான்கு வயது சிறுவனை முட்டித்தள்ளிய லொறி – சிறுவன் பரிதாபமாக பலி…!!
அம்பலன்தோட்டை – ரோடவல பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட நான்கு வயது சிறுவனை லொறி ஒன்று முட்டியதில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று பிற்பகல் சுமார் 02 மணியளவில் நடந்துள்ளதாகவும், விபத்தில் உயிரிழந்த சிறுவன் சமோத் தில்சர எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வாதுப்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating