உத்தரப்பிரதேசத்தில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த கணவன்…!!
உத்தரப்பிரதேச மாநிலம் சான்ட் ரவிதாஸ் நகர் மாவட்டத்தில் உள்ள சக்காபூர் கிராமத்தில் தீபெஷ் சவுபே மற்றும் அவருடைய மனைவி அர்ச்சனா தேவி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தீபெஷ் அவரது மனைவி தேவியை சரிமாரியாக கத்தியால் வெட்டி தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தீபெஷை கைது செய்துள்ளனர். கள்ளக்காதல் உறவில் சந்தேகப்பட்டு தேவியை கொன்றுள்ளதாக கூறப்படுகின்றது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating