பிலிப்பைன்ஸ் நாட்டில் வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலை
Read Time:1 Minute, 0 Second
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மயோன் எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கத் தயாராக இருக்கிறது. இதனால் அதன்சுற்றுப்பகுதியில் வசிக்கும் 50ஆயிரத்துக்குமேற்பட்டவர்களை அங்கு இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த எரிமலை 6 முறை வெடித்து சாம்பலைக் கக்கியது.
அப்போது கக்கப்பட்ட சாம்பல் அரை மைல் தொலைவுக்கு சாம்பல் காற்றில் கலந்து பறந்தது. இந்த எரிமலை 8ஆயிரத்து 118 அடி உயரம் உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள 22 எரிமலைகளில் மயோன் எரிமலையும் ஒன்று. இது 1993-ம் ஆண்டு எரிமலைக் குழம்பை கக்கியபோது 79 பேர் கொல்லப்பட்டனர்.