உதயநிதி-மஞ்சிமா மோகன் இணையும் படம் பூஜையுடன் தொடங்கியது…!!

Read Time:2 Minute, 7 Second

201609151628333477_udhyanaidhi-manjima-mohan-movie-kick-start-today_secvpfஉதயநிதி-மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை ‘தூங்காநகரம்’ படத்தின் இயக்குனர் கௌரவ் இயக்குவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இவர்கள் இணையும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். டிமாண்டி காலனி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அரவிந்த் சிங் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் புதிய படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை முடித்த பிறகு அந்த படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கராஜ வனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்…!!
Next post நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மாதுளை…!!