கடந்த 48 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழப்பு 40 பேர் காயம்…!!
சாரதிகளின் நித்திரை கலக்கமே அதிக வாகன விபத்துக்களுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக வாகன போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித பெர்ணான்டோ தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று அதிகாலை கிளிநொச்சி பளை – தர்மங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்திற்கும் சாரதியின் நித்திரை கலக்கமே காரணம் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் ஐவர் உயிரழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating