விடியும் வரை கிணற்றுக்குள் உயிருக்காக போராடிய யானையின் நிலை…!!
திருகோணமலை – மொறவெவ பிரதேச செயலாளர் பகுதியில் கிணறு ஒன்றில் யானையும் யானையின் குட்டியும் நேற்றிரவு (15) வீழ்ந்துள்ளது.
இந்த நிலையில் அதனை மீட்கும் பணியில் பொலிஸாரும் பிரதேச சபையினரும் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
திம்பிரிவெவ காட்டுப்பகுதியிலிருந்து கிராமத்திற்குள் நுழைந்து பல நாட்களாக தொல்லை கொடுத்து வந்த யானை தனது குட்டியுடன் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது.
கிணற்றுக்குள் விழுந்த யானையானது தனது குட்டியையும் காப்பாற்றிக்கொண்டு இன்று காலை வாரை கிணற்றினுள் உயிருக்காக போராடிய வண்ணம் இருந்துள்ளது.
இதனையடுத்து மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹால் குலதுங்க மற்றும் பிரதேச சபையின் செயலாளர் ஜுட் ராஜசிங்கம் ஆகியோர் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் ஜே.சீ.பீ இயந்திரத்தை பயன்படுத்தி யானையையும் குட்டியையும் மீட்டுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating