பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவரின் வாகனங்கள் மோதிக் கொண்டதில் சேதம்..!!
Read Time:1 Minute, 5 Second
கொழும்பு, கெப்பிட்டிபொல மாவத்தையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவரின் கார்கள் மோதிக்கொண்டதில் இரு கார்களும் சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவம் நேற்று காலையில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பிரதானியான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஆகியோரின் வாகனங்களே மோதிக் கொண்டன.
இந்தச் சம்பவத்தையடுத்து குறித்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதால் அந்த வீதி சில மணித்தியாலங்கள் மூடப்பட்டன.
இருப்பினும் இந்த வாகனங்கள் இரண்டிலும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Average Rating