பாரத லக்ஷ்மன் வழக்கு: மூவர் மேன்முறையீடு..!!
Read Time:1 Minute, 16 Second
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவர் மேன்முறையீடு செய்துள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது மேன்முறையீட்டினை முன்வைக்க, சட்டத்தரணிகள் ஊடாக அவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று மனுவை ஒப்படைத்துள்ளனர்.
அனுர துஷார டி மெல், சமிந்த ரவி ஜயனாத் என அழைக்கப்படும் தெமட்டகொடை சமிந்த மற்றும் டி.எம்.சரத் பண்டார ஆகியோரே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது எனவும், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் தம்மை விடுவிக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் ஐவருக்கு அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating