திருகோணமலை கடற்படை முகாமில் வீரர் ஒருவர் தற்கொலை…!!
திருகோணமலை கடற்படை முகாமையை சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடற்படை முகாமிற்குள் தன்னை தானே சுட்டுக் கொண்டுதன் மூலம் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி பொல்கொல பகுதியை சேர்ந்த அனுர நிசாந்த குமார என்ற 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மரணத்திற்கான காரணம் இதுவரையிலும் கண்டறிப்படவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating