பொலிஸார் மீது குண்டு வீச்சு! துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சந்தேகநபர் தலைமறைவு…!!
Read Time:1 Minute, 17 Second
கொழும்பை அண்டிய பகுதியான அதுருகிரிய பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் ஒருவரை இன்று கைது செய்வதற்கு பொலிஸார் சென்ற போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரை நோக்கி குண்டொன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபரை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சந்தேகநபர், காயத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தப்பிச்சென்ற நபரை விரைந்து தேடும் பணியில் அதுருகிரிய பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating