தந்திரமாக திருடிய கொள்ளையர்களை கண்டு பிடித்த மோப்ப நாய்கள்…!!

Read Time:2 Minute, 39 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல பிரதேசத்தில் ஆசிரியர்ஒருவரின் வீட்டில் களவாடப்பட்ட 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாரொக்க பணம் ஆகியவற்றை திருடிச் சென்றவர்களை புதிதாக ஹற்றன் பிரதேச பொலிஸ்பிரிவு மோப்ப நாய்களின் உதவியோடு பிடிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்தில் ஆசிரியர் மற்றும் அவரின் மனைவிவீட்டை விட்டு வெளியில் சென்ற வேளையில் வீட்டில் உட்புகுந்த இனந்தெரியாதவர்கள்மின்சாரத்தை நிறுத்தி விட்டு தந்திரமாக கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதன்போது வீட்டில் முதியோர் ஒருவர் மட்டும் இருந்ததாக தெரியவந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியர் இன்று காலை முறைப்பாடு ஒன்றைபதிவு செய்துள்ளார்.

முறைபாட்டை ஏற்ற பொலிஸார் மோப்ப நாய்களை ஸ்தலத்திற்கு கொண்டு விசாரணையைநடவடிக்கையில் ஈடுப்பட்ட போது அந்த மோப்ப நாய்கள் கள்வர்களால் விட்டுசெல்லப்பட்ட கைத் தொலைபேசியின் பின்புற மூடியை மோப்பம் எடுத்து பின் தொடர்ந்து சென்று சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த கைத்தொலைபேசிக்குசம்பந்தப்பட்ட நபர்களை தாவி பிடித்துள்ளது.

இதன் பின்னர் பொலிஸார் இவர்களின் மீது விசாரணை மேற்கொண்ட பொழுது உண்மையானதிருட்டு சம்பவம் அம்பலமானது.

அதன் பின்னர் குறித்த இரு சந்தேக நபர்களை பொலிஸார்கைது செய்துள்ளதுடன், குறித்த நபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகைகள் மீட்கப்படாத நிலையில், 70,000 ரூபாய் பணமும், ஒரு கைத்தொலைபேசியும்மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதிப்பில்லை.. காலநிலை மாற்றமடையும்…!!
Next post நெலுவ அமல்வத்த ​தோட்டத்தில் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை…!!