போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் கைது…!!
வெளிநாட்டவருடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் தெஹிவளைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நைஜீரிய நாட்டுப் பிரஜை ஒவருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து ஒரு கிலோகிராம் கொக்ஹென் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து மேலும் பெருந்தொகையான கொக்ஹெயின் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜை தங்கியிருந்த இரத்மலானை பகுதி வீட்டிலிருந்தே ஏனைய கொக்ஹெயின் தொகை மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கைப் பிரஜை கொலன்னாவை மீதொட்டுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், நீதிமன்றில் பெற்றுக்கொண்ட உத்தரவுக்கமைய பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Average Rating