லிபியாவில் குண்டுவீச்சில் அப்பாவி மக்கள் 3 பேர் பலி..!!

Read Time:1 Minute, 35 Second

201610060543088694_libya-at-least-3-civilians-killed-12-injured_secvpfலிபியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கிழக்கு பகுதி தளபதி கலிபா ஹப்தார் ஆதரவு படைகள், உள்நாட்டு போராளிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன.

இவ்விரு தரப்பினருக்கு இடையே நடந்துவரும் சண்டையில் அப்பாவி மக்கள் சிக்கி பலியாவது தொடர்கதை ஆகி வருகிறது.

ஹப்தார் ஆதரவு படைகள் சமீப காலமாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளபோதும், பெங்காசி நகரில் சில குறிப்பிட்ட பகுதிகளை உள்நாட்டு போராளிகளிடம் இருந்து கைப்பற்ற முடியாமல் திணறி வருகின்றன.இதற்காக போராளிகளை குறிவைத்து ஹப்தார் படைகள் தொடர்ந்து வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஹப்தார் படைகள், போராளிகளை குறிவைத்து குண்டுவீச்சு நடத்தின. ஆனால் அவற்றில் சில குண்டுகள், குடியிருப்பு பகுதிகளில் போய் விழுந்தன. இதில் அப்பாவி மக்கள் 3 பேர் சிக்கி உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இது பெங்காசி நகரில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது..!!
Next post எய்ட்ஸ் நோயாளிகளிடம் பாரபட்சம் காட்டினால் இரண்டு ஆண்டு ஜெயில்..!!