10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை…!!
Read Time:1 Minute, 10 Second
களுத்துறை மாவட்டத்தின் பல பாகங்களில் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அத்துடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில பகுதிகளுக்கு தற்காலிகமாக நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஸ்கடுவ,வாதுவ,பொடுப்பிட்டிய,களுத்துறையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள்,நாகொட,தர்க்கா நகரம்,அலுத்கம,களுவமோதர ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை,நாட்டில் கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் 3 மணித்தியால மின்சார தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating