ஜனாதிபதி மைத்திரிக்கு பலத்த பாதுகாப்பு…!!
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இந்தியா-கோவாவிற்குச் சென்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பவுள்ளார்.
நாடு திரும்ப உள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் கோவாவில் இருந்து சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் மைத்திரிபால சிறிசேன திருச்சி விமான நிலையத்தை சென்றடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சியை வந்தடைய உள்ள ஜனாதிபதி மைத்திரி இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்னரே நாடு திரும்புவார் என்று கூறப்படுகின்றது.
திருச்சி விமான நிலையத்திற்குள் வருகை தரும் பயணிகளை கடுமையான சோதனைக்குட்படுத்துவதாகவும் வாகனங்களும் இரண்டு கட்டங்களாக சோதனையிடப்படுகின்றதாகவும் ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருச்சி விமான நிலையம் வழியாக நாடு திரும்ப உள்ளமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating