மின்சார அமைச்சின் முக்கிய அறிவித்தல்…!!
நீர் மின் உற்பத்திக்காக மகாவலி அதிகார சபை மேலதிக நீரை வழங்க உடன்பட்டிருப்பதால் இலங்கை மின்சார சபை மின்வெட்டு அட்டவணையில் திருத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மூன்றரை மணி நேர மின் வெட்டு ஒன்றரை மணி நேரத்துக்கு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, காலை 1 மணி நேரமும் இரவு அரை மணி நேரம் மட்டுமே மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் வினியோக மார்க்கங்களின் கட்டமைப்பு, பராமரிப்பு வேலைகளுக்காக வட மாகணத்தில் அறிவித்தலின்படி மின் தடைப்பட்டிருக்கும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்றைய அறிவித்தலை தொடர்ந்து இன்று(18) காலை 8.00 மணியில் இருந்து யாழ்ப்பாண பிரதேசங்களிலும் வவுனியா பிரதேசங்களிலும் மின் தடைப்பட்டிருக்கின்றது. குறித்த மின் தடை இன்று மாலை 6.30 மணி வரைக்கும் தொடர்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Average Rating