பாரூக்கை மீட்க புளொட் சர்வதேச அழுத்தம் ஊடாக நடவடிக்கை எடுக்குமா?

Read Time:3 Minute, 9 Second

Plote.Farook.gifparuka20.jpgகடந்த (16.05.2006) புலிகளின் நிதர்சனம் இணையதளத்தில் 12.12.2005ல் வன்னிப்புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் சமூகசேவகருமான சின்னத்தம்பி கணேசலிங்கம் (பாரூக்) என்பவர் சுயவிருப்பத்தில் புளொட் தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வன்னி சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நிரூபிக்கும் வகையில் பாரூக் வன்னியில் நிற்கின்ற பல புகைப்படங்களை அவ்விணையதளம் பிரசுரித்திருந்தது. ஆனால் பிரசுரித்த சில நிமிடங்களில் அந்த செய்தி
அவ்விணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த ஆதாரத்தை வைத்து பாரூக்கை கடத்தியது புலிகள் என்பதையும் வன்னியிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதையும் புளொட் தலைமைப்பீடம் சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்தி பாரூக்கை மீட்டெடுக்கப் போகிறார்களா?
அல்லது தங்களது உயிர்களுக்கு பயந்து புளொட் அமைப்பு மௌனம் சாதிக்கப் போகிறார்களா?. என்று எமது அதிரடி இணையதளம் ஊடாக இவ்விடயத்தைப் பகிரங்கமாக அம்பலப்படுத்தி வெளிக்கொணர்ந்தோம்.
இதேவேளை இன்று அதிகாலை புலிகளின் நிதர்சனம் இணையதளம் பாருக் தனது மனைவியுடன் வன்னியில் எடுத்த புகைப்படங்கள் உட்பட பல புகைப்படங்களையும் சில முக்கிய விடயங்களையும் மீண்டும் பிரசுரித்துள்ளது.
இதற்குப் பின்பும் தற்போது புலிகளுக்கு சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள தடை உட்பட்ட புலிகள் மீதுள்ள பல அழுத்தங்களுக்கு மத்தியில் பாருக்கை மீட்க புளொட் சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்போகிறதா? அல்லது வழமைபோல் தமது உயிர்களுக்குப் பயந்து மௌனமாக இருக்கப் போகிறீர்களா என்று கேட்க விரும்புகிறோம்.
பாருக் அவர்களின் விடுதலைக்காக புளொட் எடுக்கப் போகும் நடவடிக்கையானது புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள், மாற்றியக்கப் போராளிகள் உட்பட்ட அனைவரையும் விடுதலை செய்யும் நடவடிக்கைக்கு ஓர் முன்மாதிரியாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவுள்ளது என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
-அதிரடி ஆசிரியர்குழு- 21.05.06 Thanks… WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப் புலிகள் இனி சுயாதீனமாக செயற்படுவார்கள்: சுரேஸ் பிரேமச்சந்திரன்
Next post தங்களின் மழலைச் செல்வங்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு புளொட்பாரூக் சாந்தா தம்பதிகள் வன்னிக்கு உல்லாசப்பயணம் என்கிறார்கள் வன்னிப்புலிகள்!!! இது எப்படியிருக்கு??