தங்களின் மழலைச் செல்வங்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு புளொட்பாரூக் சாந்தா தம்பதிகள் வன்னிக்கு உல்லாசப்பயணம் என்கிறார்கள் வன்னிப்புலிகள்!!! இது எப்படியிருக்கு??
கடந்த 12.12.2005ல் வன்னிப்புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் சமூகசேவகருமான சின்னத்தம்பி கணேசலிங்கம் (பாரூக்) அவர்களையும் புளொட்பாரூக் புலிகளால் கடத்தப்பட்டு வன்னி கொண்டு செல்லப்பட்டதை அறிந்து பாரூக் அவர்களைப் பார்வையிடச் சென்ற அவரது துணைவியார், இரண்டு பிள்ளைகள், தாயார், சகோதரிகள் ஆகியோரில் பாரூக்கின் துணைவியார் மட்டும் தொடர்ந்தும் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் நாம் அதிரடியின் செய்தியில் அம்பலப்படுத்தி இருந்தது நீங்கள் அறிந்ததே.
தற்போது புலிகளின் தமிழ்நெற் மற்றும் நிதர்சனம் இணையத்தளங்கள் புளொட் தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக புளொட் பாரூக் அவர்கள் தானாகவே விரும்பி வன்னி வந்ததாகக் குறிப்பிட்டு பாரூக்,சாந்தா தம்பதிகளின் பல புகைப்படங்களைப் பிரசுரித்துள்ளனர். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலிகளின் இணையத்தளங்களே.. நீங்கள் குறிப்பிட்டபடி பாரூக் தம்பதிகள் தாமாகவே விரும்பி வன்னி வந்திருந்தால் ஏன் தமது மழலைச் செல்வங்களான சிம்சுபன்(9வயது) சண்முகி(7வயது) ஆகியோரை வவுனியா செட்டிக்குளத்திலேயே அநாதைகளைப் போன்று விட்டுவிட்டு வன்னிக்கு செல்ல வேண்டும்?
புளொட்பாரூக் அவர்கள் வன்னிப்புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட போது அவரை மீட்டுத்தரும்படி கண்காணப்புக்குழுவினரின் கால்களில் விழுந்து புளொட்பாரூக் அவர்களின் துணைவியாரும் சகோதரங்களும் ஏன் கதறியழ வேண்டும்??
அல்லாவிடில் பாரூக்தம்பதிகள் வன்னி சென்று புலிகளுடன் இணைந்துவிட அவர்களது மழலைகள் இருவரும் புளொட்டின் கொள்கையுடன் இணைந்து வவுனியாவிலேயே தங்கி விட்டார்களா???…. Thanks…athirady.com
Average Rating