மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு நீதிபதி விதித்த அதிர்ச்சி தீர்ப்பு…!!
அமெரிக்காவில், மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு, 1,503 ஆண்டுகள், சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணம், பிரஸ்னோ நகரைச் சேர்ந்தவன் ஜான் (41) இவன், தன் மகளை, 2009 – 2013 வரை, தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
தற்போது, 23 வயதாகும் அந்தப் பெண், தந்தை தனக்கு செய்த கொடுமை குறித்து போலீசில் புகார் செய்தார், போலீசார், ஜானை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, பிரஸ்னோ கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, எட்வர்ட் சர்கிசியனிடம், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம்: என்னை, உறவினர் ஒருவர் பலாத்காரம் செய்தார். இதிலிருந்து காப்பாற்ற வேண்டிய தந்தை, அந்த சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, என்னை பலாத்காரம் செய்தார். சிறுமியாக இருந்ததால், என்னால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை; நான் அடைந்த வலி மற்றும் வேதனைக்காக, ஒரு போதும் என் தந்தை வருத்தம் அடைந்தது கிடையாது. இவ்வாறு, அந்த பெண் வாக்குமூலம் அளித்தார்.
இந்த வழக்கில், ஜானுக்கு, 1,503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
நீதிபதி கூறுகையில், குற்றவாளி, இந்த உலகில் வாழவே அருகதையற்றவன், சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவன். இவன், வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்றார்.
Average Rating