சிறுவனை கட்டிவைத்து கொடுமைப்படுத்திய பெற்றோர்! தந்தை கைது…!!
செவனகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கயிற்றால் கட்டி வைக்கப்பட்ட நிலையில் 8 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் அவனது வீட்டில் தனியாகவே இருந்தார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேசை ஒன்றில் மீது குறித்த சிறுவன் கயிற்றினால் இறுக்கமாக கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
கட்டி வைக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த சிறுவனை மீட்டுள்ளதாகவும் சிறுவனின் உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் வெளியில் செல்லும் போது குறித்த சிறுவன் அதிக பிடிவாதம் பிடிக்கின்றமையினால் பெற்றோர்கள் அவரை வீட்டில் வைத்து கட்டிவிட்டு செல்லும் வழக்கம் இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவனை கொடுமைபடுத்திய குற்றத்திற்காக அவரின் தந்தையை பொலிஸ் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும், குறித்த தந்தையை எம்பிலிப்பிட்டிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating