கட்டுநாயக்க – நீர்கொழும்புக்கிடையிலான புகையிரத சேவைகள் ரத்து…!!
கட்டுநாயக்க மற்றும் நீர்கொழும்புக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத வீதியை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இப்போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க மற்றும் நீர் கொழும்பு புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத வீதியை இரட்டை வீதியாக மாற்றுவதற்கு, குறித்த புகையிரத போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வீதியை இன்று(28) இரவு தொடக்கம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை புகையிரத போக்குரவத்துச்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய, கொழும்பு கோட்டை தொடக்கம் சீதுவ வரை, சிலாபம் தொடக்கம் நீர்கொழும்பு வரை புகையிரத சேவை இடம்பெறும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது
Average Rating