மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு…!!
Read Time:1 Minute, 7 Second
மட்டக்குளி – சமித்புர பிரதேசத்தில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இன்று(31) அதிகாலை உயிரிந்துள்ளார்.
அத்தோடு இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள மேலும் இருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தேசிய மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு இன்று வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating