முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்
Read Time:59 Second
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பஸீர் வாலி மொஹமட்டை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிப்பதாக சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவிக்கின்றது. இவ்வாறான குண்டுத்தாக்குதல் மனித நேயமற்ற மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல், இதனை மிகவும் வன்மையாக கண்டிப்பதாகவும் முஸ்லிம் மீடியாபோரம் தெரிவிக்கின்றது.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் நீண்ட கால உறவு இருந்து வருவதுடன், உயர் ஸ்தானிகள் பசீர் வாலி மொஹமட் இந்த உறவு பலமடைவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றார்.