சபர்ணாவை தொடர்ந்து மேலும் ஒரு டிவி நடிகை பிணமாக மீட்பு…!!

Read Time:2 Minute, 30 Second

201611131127411271_tv-actress-rekha-mohan-dead_secvpfடிவி நடிகையான சபர்ணா, நேற்று அவரது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சாவுக்கு என்ன காரணம்? என்ற போலீசார் விசாரித்து வரும் நிலையில், மேலும் ஒரு டிவி நடிகை அவரது வீட்டில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது திரையுலகில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

மலையாள சினிமா மற்றும் டிவியில் நடிகையாக வலம் வருபவர் ரேகா மோகன். 1990-களில் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக பேசப்பட்டவர். மம்முட்டி, மோகன்லால் ஆகியோர்களுடன் நடித்துள்ளார். பல டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திரிசூர் ஆகும். திரிசுரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் மோகன் மலேசியாவில் உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், ரேகா மோகன் வசித்து வந்த வீடு கடந்த இரண்டு நாட்களாக பூட்டிக் கிடந்துள்ளது. அடிக்கடி படப்பிடிப்பு சம்பந்தமாக ரேகா வெளியே சென்றுவிடுவதால் அவரது வீடு பூட்டி கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், ரேகாவின் கணவர் மோகன் மலேசியாவில் இருந்து அவருக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்கவில்லை என்றதும் தனது நண்பர்களுக்கு தகவல் அனுப்பி, ரேகா தங்கியிருந்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் போலீசாரின் உதவியுடன் ரேகாவின் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து பார்த்தபோது, ரேகா அங்கு பிணமாக கிடந்துள்ளார். அவர் உடல் ரொம்பவும் அழுகிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ரேகாவின் சாவுக்கு யார் காரணம்? என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காரின் அதிர்வுகளால் உச்சமடையும் விசித்திர பெண்…!!
Next post ஆவா குழுவின் தேவை யாருக்கானது? கட்டுரை